
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனைடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு போஃப் லிட்ச்ஃபீல்ட் - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபோப் லிட்ச்ஃபில்ட் 60 ரன்னில் விக்கெட்டி இழந்தார்.
அதன்பின் ஜார்ஜியா வொல்வுடன் இணைந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா வோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 12 பவுண்டரிகளுடன் 101 ரன்களை எடுத்த நிலையில் ஜார்ஜியா வோல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பெத் மூனியும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதற்கு மத்தியில் எல்லிஸ் பெர்ரியும் தனது ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதன் மூலம் அஸ்திரேலிய அணியும் 300 ரன்களை கடந்தது.