
Baba Aparajith mankads Narayan Jagadeesan, furious Jagadeesan leaves field in anger (Image Source: Google)
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 6ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பின சேப்பாக் சூப்பர் கில்லீஸ்,நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. நெல்லை அணியில் களமிறங்கிய சஞ்சய் யாதவ் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.
அதன்பின் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சேப்பாக் அணி களமிறங்கியது. கௌசிக் காந்தி மற்றும் நாரயணன் ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அப்போது ஆட்டத்தின் 4ஆவது ஓவரை வீசிய பாபா அப்ரஜித் அஸ்வின் ஸ்டைலில் ஒரு சம்பவத்தை செய்தார்.