
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது புள்ளிப்பட்டியளில் 3 ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்று விடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்கவாட், ஷிவம் துபே, டெவான் கான்வே உள்ளிட்ட வீரர்கள் திறமையாக விளையாடி வருவதால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். குறிப்பாக நியூசிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேன் டெவோன் கான்வே இந்த தொடரில் சிறப்பாக ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், தோனி குறித்து அளித்துள்ள பேட்டியில் டெவான் கான்வே கூறுகையில், “தோனியை கேப்டனாக பெற்றிருப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாகும். கிரிக்கெட்டில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் எனக்கு ஆதரவாக இருப்பதை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்படுவதற்கு தோனி உதவினார். அவர் மிகவும் அமைதியாக இருப்பார். எந்த நேரத்திலும் தோனி பதட்டப்பட மாட்டார். மிகவும் சுதந்திரமாக நாங்கள் விளையாட தோனி அனுமதிக்கிறார்.