
'Ball Tampering?': England Players Seen Scuffing The Ball, Stuart Broad Defends (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா தனது 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச இங்கிலாந்து அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக (Ball Tampering) குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி நேற்று நான்காம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷனின் போது, இங்கிலாந்து வீரர்கள் பந்தை தரையில் போட்டு ஷூக்களால் பந்தை சேதப்படுத்துவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர், இந்த புகைப்படங்களை வெளியிட்டு, இங்கிலாந்து வீரர்கள் "Ball Tampering" செய்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளனர்.