தென் ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியிலும் நடைபெற இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 06ஆம் தேதி வரையிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது டிசம்பர் 09ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 19ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி, இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக காயம் காரணமாக பாகிஸ்தன் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியதுடன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் டெவால்ட் பிரீவிஸ், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சென், ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.
SQUAD ANNOUNCEMENT
— Proteas Men (@ProteasMenCSA) October 27, 2025
The South African Men’s selection panel has announced the 15-player squad for the two-match Test series against India from 14 - 26 November in the subcontinent.
Test captain Temba Bavuma returns to the side after missing the recent Pakistan Test series… pic.twitter.com/dOGTELaXUu