
BCCI chief medical officer Abhijit Salvi resigns due to personal reasons (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு குழப்பங்களும், சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. கேப்டன் பதவி நீக்கம், ஐபிஎல் புதிய அணிகளுக்கு சிக்கல், பழைய அணிகளின் புகார் என பல பிரச்சினைகளை அடுத்தடுத்து சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், பிசிசிஐயில் 9 வருடமாக பணிபுரிந்த முக்கிய நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது பிசிசிஐக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பிசிசிஐயின் தலைமை மருத்துவராக இருந்தவர் அபஜித் சால்வி, இவர் கடந்த 9 வருடமாக பிசிசிஐயில் பணிபுரிந்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பு மருத்துவராக பல வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கும் செல்வார். தற்போது கரோனா அதிகம் உள்ள தென் ஆப்பிரிக்கா தொடருக்கு அபஜித் சால்வி செல்லவில்லை.