Advertisement
Advertisement
Advertisement

கரோனாவிலிருந்து மீண்டார் கங்குலி!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, குணமடைந்து வீடு திரும்பினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 31, 2021 • 15:24 PM
BCCI President Ganguly discharged from hospital after recovering from COVID-19
BCCI President Ganguly discharged from hospital after recovering from COVID-19 (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 28ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்ட கங்குலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

Trending


இந்நிலையில், சவுரவ் கங்குலி கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார். இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார். 

கரோனாவில் இருந்து குணமடைந்த போதும் சவுரவ் கங்குலி சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement