Advertisement
Advertisement
Advertisement

அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan October 16, 2021 • 20:27 PM
BCCI president Sourav Ganguly hopeful of IPL 2022 taking place in India
BCCI president Sourav Ganguly hopeful of IPL 2022 taking place in India (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நேற்றுடன் நடைபெற்று முடிந்தது. இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த இத்தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியமைக்கப்பட்டு, தற்போது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வேளைகளில் பிசிசிஐ இறங்கியுள்ளது. ஏனெனில் அடுத்த சீசனில் மேலும் இரு புது அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Trending


இதற்கிடையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தான் நடைபெறும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதுகுறித்து பேசிய கங்குலி, “அடுத்த சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் இது இந்தியாவின் கிரிக்கெட் தொடர். கரோனா நிலைமை மாறியவுடன் இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்ட தொடரை நடத்த மிகுந்த ஆர்வத்தில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement