
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி 2017 ஜனவரி 1 முதல் 2020 டிசம்பா் 31 தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு மேற்கண்ட விருதுகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் வீரா், வீராங்கனைகள் பெயா்களை பரிந்துரைக்கின்றன.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் என இரு தமிழர்களின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.
மேலும் அர்ஜுனா விருதுக்காக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, பேட்ஸ்மேன்கள் கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.