Advertisement
Advertisement
Advertisement

ரஞ்சி கோப்பை 2022: பெங்களூருவில் நாக் அவுட் சுற்றுகள்!

ஐபிஎல் 2022 போட்டி முடிந்தபிறகு ரஞ்சி கோப்பை நாக்அவுட் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெறவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan April 29, 2022 • 12:04 PM
Bengaluru to host Ranji Trophy knockouts from June 4
Bengaluru to host Ranji Trophy knockouts from June 4 (Image Source: Google)
Advertisement

கரோனா சூழல் காரணமாக, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அந்தப் போட்டி கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் முதலில் அத்தகைய சூழலை எதிா்கொண்டபோதும், போட்டியை 2 பகுதிகளாகப் பிரித்து நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ரஞ்சி கோப்பைப் போட்டியின் லீக் சுற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஓர் ஆட்டமும் நடைபெற்றன. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு ஜூன் 4 முதல் ரஞ்சி கோப்பைப் போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் பெங்களூரில் நடைபெறவுள்ளன. ஐபிஎல்-லில் இருந்து வரும் வீரர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்களும் கரோனா தடுப்பு வளையத்துக்குள் இருக்கவேண்டும்.

Trending


காலிறுதி ஆட்டங்கள் ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறவுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 12 முதல் 16 வரையும் இறுதிச்சுற்று ஆட்டம் ஜூன் 20 முதல் 24 வரையும் நடைபெறவுள்ளன. 

ரஞ்சி கோப்பை நாக்அவுட் ஆட்டங்கள்
காலிறுதி: ஜூன் 4 முதல் 8 வரை

  • பெங்கால் - ஜார்க்கண்ட்
  • மும்பை - உத்தரகண்ட்
  • கர்நாடகம் - உத்தரப் பிரதேசம்
  • பஞ்சாப் - மத்தியப் பிரதேசம்

அரையிறுதி: ஜூன் 12 முதல் 16 வரை

இறுதிச்சுற்று: ஜூன் 20 முதல் 24 வரை
 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement