Ranji trophy knockouts
Advertisement
ரஞ்சி கோப்பை 2022: பெங்களூருவில் நாக் அவுட் சுற்றுகள்!
By
Bharathi Kannan
April 29, 2022 • 12:04 PM View: 610
கரோனா சூழல் காரணமாக, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அந்தப் போட்டி கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் முதலில் அத்தகைய சூழலை எதிா்கொண்டபோதும், போட்டியை 2 பகுதிகளாகப் பிரித்து நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ரஞ்சி கோப்பைப் போட்டியின் லீக் சுற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஓர் ஆட்டமும் நடைபெற்றன.
இந்நிலையில் ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு ஜூன் 4 முதல் ரஞ்சி கோப்பைப் போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் பெங்களூரில் நடைபெறவுள்ளன. ஐபிஎல்-லில் இருந்து வரும் வீரர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்களும் கரோனா தடுப்பு வளையத்துக்குள் இருக்கவேண்டும்.
Advertisement
Related Cricket News on Ranji trophy knockouts
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement