Advertisement
Advertisement

Ranji trophy knockouts

Bengaluru to host Ranji Trophy knockouts from June 4
Image Source: Google

ரஞ்சி கோப்பை 2022: பெங்களூருவில் நாக் அவுட் சுற்றுகள்!

By Bharathi Kannan April 29, 2022 • 12:04 PM View: 463

கரோனா சூழல் காரணமாக, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அந்தப் போட்டி கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் முதலில் அத்தகைய சூழலை எதிா்கொண்டபோதும், போட்டியை 2 பகுதிகளாகப் பிரித்து நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு ரஞ்சி கோப்பைப் போட்டியின் லீக் சுற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஓர் ஆட்டமும் நடைபெற்றன. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு ஜூன் 4 முதல் ரஞ்சி கோப்பைப் போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் பெங்களூரில் நடைபெறவுள்ளன. ஐபிஎல்-லில் இருந்து வரும் வீரர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்களும் கரோனா தடுப்பு வளையத்துக்குள் இருக்கவேண்டும்.

Related Cricket News on Ranji trophy knockouts