Advertisement

ஓய்வை அறிவித்து அதிர்ச்சியளித்த ராஜபக்ஷ!

இலங்கை அணியில் இளம் நட்சத்திர வீரர் பனுகா ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan January 05, 2022 • 15:33 PM
Bhanuka Rajapaksa Announces Retirement From Sri Lanka Cricket
Bhanuka Rajapaksa Announces Retirement From Sri Lanka Cricket (Image Source: Google)
Advertisement

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் இளம் அதிரடி வீரராக பார்க்கப்பட்டவர் பானுகா ராஜபக்ஷ. மேலும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவர் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கினார். 

இந்நிலையில் பானுகா ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட்டிலிருப்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் தனது ஓய்வு கடிதத்தை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்ததாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.

Trending


இலங்கை கிரிக்கெட் சமீபத்தில் அறிமுகப்படுத்திய உடற்தகுதி தரத்துடன் கிரிக்கெட் விளையாட முடியாது என்று பானுகா குறிப்பிட்டுள்ளாராம். 

குறித்த உடற்தகுதி தரத்துடன் தன்னால் பந்தை அதிரடியாக அடிக்க முடியாது என அவர் நினைப்பதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆனால் அவர் தனது குடும்ப பொறுப்புகள் காரணமாகவே ஓய்வை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்காக இதுவரை 5 ஒருநாள், 18 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள ராஜபக்ஷ இரண்டு அரைசதங்களுடன் 409 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement