
ஒரு காலத்தில் இந்திய அணியில் கை விரல் விட்டு எண்ணும் அளவு தான் 140 கிலோ மீட்டர் என்ற வேகத்தையே சிலர் வீரர்கள் வீசுவார்கள். ஆனால் ஐபிஎல் மற்றும் விராட் கோலி காலத்துக்கு கிறகு, அது மெல்ல மெல்ல மாறி வந்தது.
இப்போது இந்திய அணியில் அண்டர் 19 கிரிக்கெட் விளையாடும் வீரர்களே சர்வ சாதாரணமாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறார்கள். இந்த நிலையில் காஷ்மீர் வீரர் உம்ரான் மாலிக் அதிவேகமாக பந்துவீசி, புதிய சாதனைகள் எல்லாம் படைத்தார். ஏதோ, டீ காபி குடிப்பது போல் எப்போதும் 150 கிமீ வேகத்தில் பந்துவீசுவதை உம்ரான் மாலிக் பழக்கமாக வைத்திருந்தார்.
ஐபிஎல் போட்டியில் கூட தொடர்ந்து 14 போட்டிகளில் அதிவேகமாக பந்துவீசி, அதற்காக விருதுகளை வாங்கினார் மேலும் பயிற்சியில் கூட 163 கிமீ வேகத்தில் வீசி உம்ரான் மாலிக் அசத்தினார். நேற்று ஒரு உலக சாதனை நிகழ்ந்துள்ளது. ஆனால், அது உம்ரான் மாலிக் படைத்தது அல்ல, புவனேஸ்வர் குமார் செய்தது