Advertisement

புவனேஷ்வர் குமார் குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு விளையாட விருப்பமில்லாத காரணத்தில் தான், இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 15, 2021 • 21:29 PM
“Bhuvneshwar Kumar Just Does Not Want To Play Test Cricket Anymore”
“Bhuvneshwar Kumar Just Does Not Want To Play Test Cricket Anymore” (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் கரோனா 2வது அலை காரணமாக, ஐபிஎல் 2021 தொடர் பாதியில் நிறுத்தப்பட்டு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் துவண்டு போய் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் தான் உள்ளது.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் ஆக., 4ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. 

Trending


இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, அடுத்த மாதம் 2ஆம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. இந்த அணியில் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 4 மாற்று வீரர்கள் உடன் அழைத்து செல்லப்படுகிறார்கள். அதேசமயம், இதில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ் குமார் ஆகிய மூன்று சீனியர் வீரர்கள் பெயர் இடம்பெறவில்லை.

குறிப்பாக, காயத்தில் இருந்து மீண்டு வந்த புவனேஷ் குமார் அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியது. ஏனெனில், டெஸ்ட் தொடர் நடைபெறும் இடம் இங்கிலாந்து. அங்கு, புவனேஷ் போன்ற அனுபவம் வாய்ந்த சீனியர் ஒருவரை இந்திய அணி மிஸ் செய்கிறது என்றால், அது பேரிழப்பாக முடியும். 

பிரிட்டன் கண்டிஷனில் ஸ்விங், பேஸ் என்று வெரைட்டி கலந்து விருந்து வைப்பதில், புவனேஷை விட இந்திய அணியில் ஒருவர் சிறப்பானவராக இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பவுலர், அதுவும் முழு உடற் தகுதியுடன் இருக்கும் போது, ஏன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் புவனேஷ்வர் குமார் அணியில் இடம் பெறாதது குறித்த அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் அதிர்ச்சில் ஆழ்த்தியுள்ளது.

அத்தகவலில் "புவனேஷ்வர் இனி டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்பவில்லை. அவர் தனது பயிற்சிகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துவிட்டார். சிகப்பு பந்துகளை கொண்டு அதிக நேரம் எடுக்கும் பயிற்சியைத் தவிர்த்து, வெள்ளை நிற பந்துகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஆகையால், இனி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மறந்து விட நேரிடும். இது இந்திய அணிக்கு இழப்பு என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், ஒரு இந்திய பவுலர் இங்கிலாந்திற்கு செல்ல வேண்டும் என்றால், அது புவனேஷ் குமாராக தான் இருந்திருக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement