
Big relief for CSK, Ruturaj Gaikwad on his way to join defending champions for IPL 2022 (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசன் திருவிழா வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கவுள்ளது. மே 29ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.
இந்தாண்டு கூடுதலாக 2 புதிய அணிகள், மெகா ஏலம் என போட்டி முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இன்னும் 2வாரங்கள் கூட இல்லாததால் அனைத்து அணிகளும் தங்களது பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டன. நடப்பு சாம்பியனான சென்னை அணி சூரத்தில் உள்ள லால் பாய் மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். தோனியின் தலைமையில் பல வீரர்கள் பயிற்சி பெற்றாலும், ஒரு பின்னடைவு இருந்துக்கொண்டே இருந்தது.