Advertisement

இந்தியாவை வென்றால் பிளாங்க் செக் ரெடி - ரமீஸ் ராஜா

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பரிசு வர இருக்கிறது என பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 08, 2021 • 21:54 PM
"Blank Cheque Ready For PCB" If Pakistan Beat India, says Ramiz Raza (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனால் பொருளாதார சிக்கலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருந்து வருகிறது. வெளிநாட்டு அணிகளை பாகிஸ்தான் வந்து விளையாட வைக்க பல கட்ட முயற்சிகளை எடுத்தது.

இதனால் நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தன. ஆனால் நியூசிலாந்து தொடர் நடைபெறுவதற்கு சற்றுமுன் பாதுகாப்பு காரணங்களால் கிரிக்கெட் விளையாட முடியாது என தொடரை ரத்து செய்தது நியூசிலாந்து. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியும் தொடரை ரத்து செய்தது.

Trending


இது பாகிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் அளவிலும், பொருளாதார அளவிலும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா கூறுகையில் ‘‘ஐசிசியின் 50 சதவீத நிதியால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செயல்பட்டு வருகிறது. ஐசிசிக்கு 90 சதவீத நிதி பிசிசிஐ-யிடம் இருந்து வருகிறது.

ஐசிசி-க்கான நிதியை பிசிசிஐ நிறுத்தினால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிலைகுலைந்து போகும் என நான் அஞ்சுகிறேன். ஏனென்றால் ஐசிசிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நிதி ஏதும் கொடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை வலுப்படுத்த வேண்டும் என நான் தீர்மானித்தேன்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஒரு வலுவான முதலீட்டாளர் என்னிடம், டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தினால், பிளாங்க் செக் தயாராக இருக்கிறது என்று கூறினார். எங்களுடைய பொருளாதாரம் வலுவாக இருந்தால் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகளால் பயன்படுத்தப்பட்டிருக்க மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement