
Brendan Taylor 'Not A Cheat' After ICC Decides To Impose 'Multi Year Ban' For Not Reporting Fixing (Image Source: Google)
ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக திகழ்பவர் பிரெண்டன் டெய்லர். இவர் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் இந்திய தொழிலதிபர் ஒருவர் தன்னை மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட கட்டாயப்படுத்தினார் என்று தனது சமூக வலைதள பதிவின் மூலம் பிரெண்டன் டெய்லர் அதிர வைக்கிறார்.
ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு விரிவான பதிவில் பிரெண்டன் டெய்லர் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார். சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு மிகவும் நீண்டதாக இருக்கிறது.