
ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நாளை டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. இதற்காக 10 ஐபிஎல் அணிகளும் கொச்சியில் முகாமிட்டு கடைசி கட்ட தயாரிப்பு பணியை நடத்துகிறது. இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தை ஓடிடியில் ஒளிபரப்பும் ஜியோ சினிமா, இன்று ஒரு மாதிரி ஏலத்தை நடத்தியது. இதில் பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்று வீர்களை தேர்வு செய்தனர்.
உண்மையான ஏலம் போலவே இது நடத்தப்பட்டது. இதில் எந்த வீரர்கள எவ்வளவு தொகைக்கு சென்றார்கள் என்பதை தற்போது காணலாம். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரெய்னாவும், ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிக்காக கிறிஸ் கெயிலும், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிக்காக ராபின் உத்தப்பாவும், மும்பை அணிக்காக கும்ப்ளேவும், பஞ்சாப் அணிக்காக மோர்கனும், ஹைதராபாத் அணிக்காக ஸ்காட் ஸ்டைரிசும், குஜராத் அணிக்காக முரளி கார்த்திக்கும், லக்னோ அணிக்காக ஆர்பி சிங்கும் களமிறங்கினர்.
இதில் முதல் செட்டில் இடம்பெற்ற வில்லியம்சனை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அவருடைய பேட்டிங் ஃபார்ம் காரணமாக இந்த முடிவு எடுத்ததாக குறிப்பிட்ட வீரர்கள் நாளையும் இதே நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்த பென் ஸ்டோக்ஸ் பெயர் வந்தது. ஸ்டோக்சை வாங்க சிஎஸ்கேவும் , பஞ்சாப்பும் மாதிரி ஏலத்தில் போட்டி போட்டனர்.