Advertisement

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா, கொழும்புவில் நடைபெறும் என ஐசிசிஅறிவிப்பு!

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா, கொழும்புவில் நடைபெறும் என ஐசிசிஅறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: இந்தியா, கொழும்புவில் நடைபெறும் என ஐசிசிஅறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 02, 2025 • 10:03 PM

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 02, 2025 • 10:03 PM

முன்னதாக இத்த்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்காகது, இந்திய-பாகிஸ்தான் எல்லை பதற்றம் உள்ளிட்ட காரணங்களினால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுப்பு தெரிவித்தது. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போதே இனி இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாடாது என்ற அறிவிப்பையும் பிசிபி வெளியிட்டிருந்தது. 

இதன் காரணமாக பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடருக்கான மைதானங்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் பாகிஸ்தான் மகளிர் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர்த்து இத்தொடரின் மற்ற போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, கௌகாத்தி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டிணத்தில் நடபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியானது பெங்களூருவிலும், முதல் அரையிறுதி போட்டியானது கௌகாத்தில் அல்லது கொழும்புவிலும், இரண்டாவது அரையிறுதி போட்டி பெங்களூருவிலும், இறுதிப்போட்டியானது பெங்களூரு அல்லது கொழும்புவில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 

Also Read: LIVE Cricket Score

மேலும் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் முதல் அரையிறுதி போட்டியானது அக்டோபர் 29ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப்போட்டி அக்டோபர் 30அம் தேதியும், இத்தொடரின் இறுதிப்போட்டியானது நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா விளையாடவுள்ள நிலையில், மற்ற போட்டிகளுக்கான அட்டவணை கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement