
COVID-19: BCCI to contribute 2000 oxygen concentrators to aid India's fight against pandemic (Image Source: Google)
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடி வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இன்றியும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றன.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் உதவி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டாயிரம் ஆக்ஸிஜன் செறியூட்டிகளை வழங்கியுள்ளது.