
முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் ஓபனர்கள் மேத்யூ வேட் 12 (6), ஷுப்மன் கில் 13 (14) ஆகியோர் ஏமாற்றிய நிலையில் அடுத்து ஹார்திக் பாண்டியா 87 (52), அபினவ் மனோகர் 43 (28), டேவிட் மில்லர் 31 (14) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 192/4 ரன்களை சேர்த்தது.
இலக்கைத் துரத்திக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் 54 (24) மட்டுமே சிறப்பாக விளையாடினார். அடுத்து ஷிம்ரோன் ஹெட்மையர் தனது பங்கிற்கு 29 (17) ரன்களை சேர்த்தார். மற்றவர்கள் சிறப்பாக சோபிக்காததால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 155/9 ரன்களை மட்டும் சேர்த்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இத்தோல்விக்குப் பிறகு பேட்டிகொடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்சன், “விக்கெட்கள் கையிருப்பில் இருந்திருந்தால், நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். பவர் பிளேவில் எங்களது ரன் ரேட் சிறப்பாகத்தான் இருந்தது. இருப்பினும், நாங்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்ததால், விக்கெட்களை வீழ்த்த முடியவில்லை. டிரென்ட் போல்ட் நேற்று இரவு காயம் காரணமாக அவதிப்பட்டதால்தான், அணியில் சேர்க்க முடியவில்லை. அவர் இல்லாதது எங்களுக்கு பெரிய இழப்புதான்.