-mdl.jpg)
டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்குகிறது. இத்தொடரில் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆரம்பத்திலேயும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்திலும் காயமடைந்து வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் அவர்கள் இல்லாத குறையைப் போக்கும் அளவுக்கு அந்த 2 துறையிலும் சமநிலையை ஏற்படுத்த கூடிய ஹர்திக் பாண்டியா நல்ல பார்மில் இருப்பது ஓரளவு பலமாக அமைகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தினார்.
ஆனால் அதே வருடம் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் 2019 உலகக் கோப்பைக்கு பின்பும் சந்தித்த காயத்தால் பந்து வீச முடியாமல் தவித்த அவர் பேட்டிங்கில் பார்மை இழந்தார். அது 2021 டி20 உலக கோப்பையில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறும் அளவுக்கு எதிரொலித்ததால் பிசிசிஐ அவரை அதிரடியாக நீக்கியது.