
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கு உள்ள மவுசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐபிஎல் தொடரை போன்று பல்வேறு தொடர்கள் உலகெங்கிலும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாட்டிலும் விரைவில் ஐபிஎல் போன்றே டி20 லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
அப்படி அங்கு நடைபெற இருக்கும் அந்த டி20-லீக்கில் இடம் பெறப்போகும் அணிகளை இந்தியாவை சேர்ந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களே வாங்கியுள்ளதால் தற்போது அந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேபோன்று உலகெங்கிலும் நடைபெறும் பல டி20 அணிகளை இந்திய அணியைச் சேர்ந்த உரிமையாளர்களே வாங்குவதால் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெளிநாட்டு டி20 தொடர்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இந்திய வீரர்கள் யாரும் இங்கு நடைபெறும் போட்டிகளை தவிர்த்து வெளிநாடுகளில் எவ்விதமான டி20 லீக் தொடரிலும் பங்கேற்க கூடாது என பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.