Advertisement

ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிலிருந்து விடுவிக்கப்பட்ட நான்கு வீரர்கள்!

ஐபிஎல் மினி ஏலத்திற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 4 ஸ்டார் வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 12, 2022 • 14:50 PM
CSK have submitted their retained and released players list to BCCI!
CSK have submitted their retained and released players list to BCCI! (Image Source: Google)
Advertisement

வரும் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் நவம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடைபெறவிருக்கிறது. இதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் பிசிசிஐ, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என பிசிசிஐ கூறியது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பட்டியலை தான் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு காரணம் ரவீந்திர ஜடேஜா தான். கேப்டன்சி சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா, அடுத்தாண்டு முதல் சிஎஸ்கே அணியுடன் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

Trending


இந்நிலையில் சென்னை அணியின் பட்டியல் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தக்கவைப்பு பட்டியலில் ஜடேஜாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. கேப்டன் தோனி அழுத்தம் திருத்தமாக ஜடேஜா தான் வேண்டும் என கூறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு மாற்றாக 4 ஸ்டார் வீரர்கள் கழட்டிவிடப்பட்டுள்ளனர். 9 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அந்த அணியில் இருந்து கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, நாராயன் ஜகதீசன், மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் கழட்டிவிட்டப்பட்டுள்ளனர். தோனிக்கு மிகவும் பொருந்திய வீரர் மிட்செல் சாண்ட்னர் விடுவிக்கப்பட்டுள்ளது தான் தற்போது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதற்கு எப்படி தோனி சம்மதித்தார் என கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தான் எம்எஸ் தோனி விளையாடப்போகும் கடைசி ஐபிஎல்-ஆக இருக்கலாம். ஏனென்றால் சென்னை மண்ணில் தான் தனது கடைசி ஆட்டம் என ஏற்கனவே தோனி கூறியிருந்தார். அதன்படி இந்தாண்டு ஹோம் மைதானங்களிலும் போட்டி நடக்கும் என்பதால் தோனி ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement