
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்றுவரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாச் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கருணரத்னே 7 ரன்களிலும், குசால் மெண்டிஸ் ஒரு ரன்னிலும், சமரவிக்ரமா 26 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த நிஷங்கா - அசலங்கா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 75 ரன்களில் நிஷங்கா ஆட்டமிழக்க, அடுத்து வந்த டி சில்வா 23 ரன்களிலும், கேப்டன் தசுன் ஷனாகா முதல் பந்திலேயும் விக்கெட்டுகளை இழந்தனர்.