
ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என ஜெய் ஷா கூறியதில் இருந்து பிரச்சினை வெடித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்றவுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அதாவது 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைகாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் வராது என முடிவெடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், ஆசிய கவுன்சிலில் இருந்து விலகவுள்ளதாகவும் அந்நாட்டு வாரியத்திடம் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு, அந்நாட்டு முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியாவே அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “உலகிலேயே பிசிசிஐ தான் பணக்கார கிரிக்கெட் வாரியம். எனவே பிசிசிஐ-க்கு எதிராக பாகிஸ்தான் எதுவுமே செய்ய முடியாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இதே காரணத்திற்காக தான் இந்தியாவிடம் மிகவும் நட்புரீதியாக இருந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் வாரியம் பலவீனமானது.