
DC bowler Mishra tests negative, out of quarantine (Image Source: Google)
பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் மூத்த வீரர் அமித் மிஸ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்து, இன்று வீடு திரும்புகிறார்.