ஐபிஎல் 2022: வார்னரின் அட்டத்தை புகழ்ந்த ரிஷப் பந்த்!
டேவிட் வார்னர் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம், டெல்லி அணிக்காக நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

DC Skipper Rishabh Pant Lays It On David Warner's Brilliant Knock Against SRH (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 21 ரன் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன் குவித்தது.
அந்த அணியால் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்களே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக நிகோலஸ் பூரன் 62 ரன்னும், மார்கிராம் 42 ரன்னும் எடுத்தனர்.
வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில், “இந்த போட்டி ஒரு பேட்டிங் குழுவாக எங்களுக்கு பொருத்தமான ஆட்டமாக அமைந்தது என்று நினைக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
எதிரணி சேசிங்கில் நிகோலஸ் பூரன் பேட்டிங் செய்யும்போது நான் அமைதியாக இருந்தேன். இந்த அதிக ரன் சேசிங்களில் ரன் ரேட்டை விட ஒரு ஓவரில் 8 முதல் 12 ரன் எடுக்க வேண்டியதிருக்கும். அதை 20வது ஓவர் வரை அடிப்பது கடினம். அதனால் பந்துவீச்சாளர்களிடம், அமைதியாக இருப்போம், முடிந்தால் அடிக்க முயற்சி செய்யட்டும் என்று கூறினேன்.
டேவிட் வார்னர் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம், டெல்லி அணிக்காக நான் பார்த்த சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று ரோவன் பாவெல் தொடர்ந்து ஆட்டங்களில் ரன் எடுக்கவில்லை. அவருக்கு நாங்கள் ஆதரவளித்தோம். தற்போது அவர் அபாரமாக விளையாடி வருகிறார். ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி ஒவ்வொரு நாளும் நூறு சதவீதம் திறமையை வழங்குகிறோம்.
நான் புல்டாஸ் பந்தில் அவுட் ஆனேன். இது விளையாட்டின் ஒரு பகுதி. அடுத்த தடவை சிக்சர் அடிப்பேன்” என்று தெரிவித்தார்.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News