
De Kock reminded us why he is such valuable player, says Bavuma (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.
அதைத் தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 288 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி சார்பாக துவக்க வீரர்கள் மலன் 91 ரன்களும், டிகாக் 78 ரன்களும் குவித்தனர். பின்னர் இறுதியில் மார்க்கம் மற்றும் வேண்டர்டுசைன் ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.