Advertisement

பரோடா அணியிலிருந்து விலகிய தீபக் ஹூடா!

நடப்பாண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பரோடா அணியிலிருந்தி விலகுவதாக நட்சத்திர வீரர் தீபக் ஹூடா அறிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 15, 2021 • 14:35 PM
Deepak Hooda Leaves Baroda Ahead Of Domestic Season
Deepak Hooda Leaves Baroda Ahead Of Domestic Season (Image Source: Google)
Advertisement

இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நட்சத்திர வீரராக திகழ்பவர் தீபக் ஹூடா. இவர் பரோடா அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 

கடந்தாண்டு உள்ளூர் போட்டிகளின் போது பரோடா அணியின் கேப்டன் குர்னால் பாண்டியாவுக்கும், துணைக்கேப்டன் தீபக் ஹூடாவிற்கு சில சலசலப்பு இருந்ததாக கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. 

Trending


அதன்பின் சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் போது கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதாக தீபக் ஹூடாவை பரோடா கிரிக்கெட் சங்கம் இடைநீக்கம் செய்திருந்தது. ஆனாலும் அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் தீபக் ஹூடா பரோடா கிரிக்கெட் அணியிலிருந்து விலகி, நடப்பாண்டு உள்ளூர் சீசன்களில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான விண்ணப்பத்தையும் தீபக் ஹூடா முன்னரே பரோடா கிரிக்கெட் சங்கத்திற்கு அனுப்பியிருந்தார். 

இதுகுறித்து பேசிய தீபக் ஹூடா,“பரோடா அணியிலிருந்து விலகுவது மிகவும் வேதனையாக உள்ளது. ஏனெனில் எனது ஆரம்ப காலம் முதலே நான் இந்த அணிக்காக தான் விளையாடி வருகிறேன். ஆனாலும் எனது பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் தற்போது நான் எடுத்துள்ள முடிவுக்கு பெரும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே நான் பரோடா அணியிலிருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement