
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், தங்களுடைய சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
இப்போட்டியில் தோல்வியின் விழிம்பில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இறுதிவரை களத்தில் இருந்து கரை செர்த்த அஷுதோஷ் சர்மாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இப்போட்டியில் அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் என 66 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர், சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
அதன்படி ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான ரன் சேஸிங்கில் 7ஆவது இடத்தில் அல்லது அதற்குக் கீழே களமிறங்கி மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாடியதன் அடிப்படையில் அஷுதோஷ் சர்மா கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வீரர் ஆண்ட்ரே ரஸைல் 36 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அதனை தற்போது அஷுதோஷ் சர்மா சமன் செய்துள்ளார்.