Advertisement

சையத் முஷ்டாக் அலி தொடரில் இம்பேக் பிளேயர் விதியை பயன்படுத்திய அணிகள்!

முதல் நாளே சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய இந்த இம்பேக் பிளேயர் விதி சில ரசிகர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 12, 2022 • 14:17 PM
Delhi's Hrithik Shokeen becomes the first 'impact player' in Syed Mushtaq Ali Trophy
Delhi's Hrithik Shokeen becomes the first 'impact player' in Syed Mushtaq Ali Trophy (Image Source: Google)
Advertisement

பிசிசிஐ நடத்தும் பிரதான டி20 தொடரில் ஒன்று சையத் முஷ்டாக் அலி தொடராகும். இதில் முதல் முறையாக இம்பேக்ட் பிளேயர் விதி முதல் முறையாக அமலுக்கு வந்தது. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இந்த விதியை கொண்ட வர முயற்சி செய்கிறது, அதற்கு இந்த விதியை முன்னோட்டமாக சையது முஸ்தாக் அலி தொடரில் பிசிசிஐ அமல்படுத்தியது.

இந்த விதியை முதல் நாளே ஏராளமான அணிகள் பயன்படுத்தியது. முதலில் அந்த விதியை பற்றி தற்போது காணலாம். அதாவது போட்டி தொடங்குவதற்கு முன் 4 மாற்று வீரர்களை ஒவ்வொரு அணியும் அறிவிக்க வேண்டும். இதில் எதாவது ஒரு வீரரை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தலாம். ஏற்கனவே பிளேயிங் லெவனில் இருக்கும் ஒரு வீரரை ஒரு இன்னிங்சில் 14ஆவது ஓவர் முடிவதற்குள் இந்த இம்பேக்ட் பிளேயரை வைத்து மாற்றலாம். 

Trending


அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு பவுலராகவோ, இல்லை பவுலருக்கு பேட்ஸ்மேனாகவோ கூட மாற்றலாம். இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. அதே போன்று ஏறகனவே ஆட்டமிழந்த பேட்ஸ்மேனுக்கு பதலாக புது பேட்ஸ்மேனை (14வது ஓவர் முடிவதற்குள்) கொண்டு வரலாம். இதே போன்று ஒரு வீரர் சில ஓவர் வீசிய பிறகு, அவர் பந்துவீச்சு எடுப்படவில்லை என தெரிந்தால் 14ஆவது ஓவருக்கு முன் அவரை மாற்றி வேறு ஒரு வீரரை இம்பேக்ட் பிளேயிராக மாற்றலாம்.

இந்த விதியை நேற்று முதல் முறையாக டெல்லி அணி பயன்படுத்தியது. 27 பந்துக்கு 47 ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன் ஹித்தேன் தலால்க்கு பதிலாக ஹிரித்திக் சோனேன் என்ற சுழற்பந்துவீச்சாளரை இம்பேக்ட் வீரராக டெல்லி அணி களமிறக்கியது. இதில் அவர் 3 ஓவர் வீசி 13 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றினார். 

இதே போன்று தமிழக அணி பந்துவீச்சாளர் நடராஜனுக்கு பதிலாக ஹரி நிசாந்த் என்ற பேட்ஸ்மேனை இம்பேக்ட் வீரராக மாற்றியது. எனினும் அவர் 36 பந்தில் 33 ரன்கள் எடுக்க தமிழக அணி தோல்வியை தழுவியது. இதே போன்று மகாராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணி சதம் விளாசிய படிக்கலுக்கு பதிலாக ஸ்ரேயாஸ் கோபாலை இம்பேக்ட் வீரராக மாற்றியது. இதில் அவர் 3 ஓவர் வீசி 15 ரன்கள் விட்டு கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். முதல் நாளே சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய இந்த விதி சில ரசிகர்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement