
Dhoni Cricket Academy launched in Bengaluru (Image Source: Google)
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் முக்கியமானவர் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி.இந்திய அணிக்காக 90 டெஸ்டுகள், 350 ஒருநாள், 98 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளா தோனி, 16ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மட்டும் செயல்பட்டு வருகிறார்.
மேலும் தனது ஓய்வுக்கு பிறகு மகேந்திர சிங் தோனி, இளம் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் கிரிக்கெட் அகாதமிகளை தொடங்கி வருகிறார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகமதாபாத்தில் தோனி பெயரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டது.