
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விமல் குமார் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் விமல் குமார் ஒரே ஓவாரில் 5 சிக்ஸர்களை விளாசியதுடன் 34 ரன்களை குவித்தும் அசத்தினார்.
அந்தவகையில் இன்னிங்ஸில் 17ஆவது ஓவரை சூப்பர் கில்லிஸ் தரப்பில் ரோஹித் சுதிர் வீசிய நிலையில் அந்த ஓவரை எதிர்கொண்ட விமல் குமார் முதல் பந்தை பவுண்டரி அடித்தார். அதன்பின் இரண்டாவது பந்தில் மிட் விக்கெட்டிலும், மூன்றாவது பந்தில் லாங் ஆஃபிலும், 4ஆவது பந்தில் ஸ்டிரெட்டிலும், 5ஆவது பந்தில் டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையிலும் கடைசி பந்தில் ஃபைன் லெக்கிலும் என அடுத்தடுத்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார்.