
Dindigul Dragons have achieved the highest-ever successful chase in TNPL history. (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 201 ரன்களை குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கங்கா ஸ்ரீதர் ராஜூ 90 ரன்களை விளாசினார்.
அதன்பின் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கோவை அணிக்கு ஹரி நிஷாந்த் - மணி பாரதி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.