
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது. அடுத்து தென் ஆப்பிரிக்கா 16.5 ஓவா்களில் 87 ரன்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆட்டமிழந்தது. அணியின் கேப்டன் பவுமா ‘ரிடையா்டு ஹா்ட்’ ஆகியிருந்தாா்.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்ஸில் தடுமாற்றத்தில் இருந்தபோது ஹாா்திக் பாண்டியா - தினேஷ் காா்த்திக் கூட்டணி அசத்தலாக விளையாடி ஸ்கோரை உயா்த்தியது. தனது முதல் டி20 அரை சதத்தை எடுத்த தினேஷ் கார்த்திக், 27 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். பாண்டியா 46 ரன்கள் எடுத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் தற்போது 2-2 என சமநிலையில் உள்ளது. கடைசி டி20 ஆட்டம் நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது.