
Dinesh Karthik Determined To "Play This World Cup" (Image Source: Google)
நேற்று முந்தினம் நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
தற்போது 37 வயதான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று டி20 போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் 13ஆவது ஓவரில் இந்தியா 81/4 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது.
அப்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். தினேஷ் கார்த்திக் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி அசத்தினார். பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.