
ஐபிஎல் 15ஆவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு சென்ற தினேஷ் கார்த்திக், சோதனை அடிப்படையில் முதலில் களமிறக்கப்பட்டார். சோதனையடிப்படையில் களமிறங்கப்பட்ட அவர், முதல் சில போட்டிகளிலேயே டெத் ஓவர்களில் அதிக ரன்களை குவித்து அசத்தினார். இதனால் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு, இறுதியில் சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதினை வென்று அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து இந்திய டி20 அணிகளிலும் இடம்பெற்று வருகிறார். இதனால், ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பை, அக்டோபர் இறுதியில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் சேர்க்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ஐபிஎல் மூலம் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில் அதே ஐபிஎல் 15ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளரை ஏன் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கவில்லை என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.