
நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குஜராத் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி பெங்களூரு அணி முதலாவதாக பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே குவித்தது. பெங்களூர் அணி சார்பாக பட்டிதார் 58 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 25 ரன்களையும் குவித்தனர்.
இதனைத்தொடர்ந்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி எளிதாகவே பெங்களூர் அணியை வீழ்த்தியது என்று கூறலாம். ஏனெனில் துவக்கம் முதலே அதிரடி காண்பித்த ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 161 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.