
எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் பல்வேறு விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற்று முடிந்திருந்தாலும், அனைத்திற்கும் தலையாயதாக இருந்தது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிதான்.
கடைசி பந்து வரை சென்ற ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் செயல்பட்ட விதம் முற்றிலும் சரி இல்லை! பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் சரியில்லை! என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தனர்.
அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அமீர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் சாஹின் அஃப்ரிடி தனது இயல்பான ஃபார்மில் இல்லை. ஆகையால் அவரை பவர் பிளே ஓவர்களில் பயன்படுத்தியிருக்கக் கூடாது. மேலும் டெத் ஓவர்களிலும் அவரது செயல்பாடு சிறப்பானதாக இல்லை. இந்நிலையில் அவரை மிடில் ஓவர்களில் பயன்படுத்தியிருக்க வேண்டும். நிச்சயம் ஒரு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருப்பார்.