
ஐசிசி நடத்தும் தொடர் என ஒன்று நடைபெற்றாலே, அதில் அனைவரின் கவனமும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றனவா என்று தான் இருக்கும். பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பார்க்க கூட்ட அழைமோதும்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியான பிரச்னைகள் நடைபெற்று வருவதால் கிரிக்கெட் போட்டிகளும் இரு அணிகளுக்கு இடையே நடைபெறுவதில்லை. ஐசிசி நடத்தும் பெரும் தொடர்களில் மட்டும் தான் மோதிக்கொள்கின்றன. அதிலும் இந்தியாவின் கையே ஓங்கி இருக்கும். ஆனால் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்து அதனை மாற்றி அமைத்தது.
இந்த போட்டி உலக அளவில் பெரும் ஈர்ப்பை பெற்றிருந்தது என்றே கூறலாம். இந்தாண்டு இரு அணிகளும் மோதிய போட்டி தான், இதுவரை கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரசிகர்களால் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கப்பட்டது என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது.