Advertisement
Advertisement
Advertisement

Emerging Asia Cup 2024: திலக், பிரப்ஷிம்ரன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் இலக்கு!

ACC Emerging Teams Asia Cup 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
Emerging Asia Cup 2024: திலக், பிரப்ஷிம்ரன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் இலக்கு!
Emerging Asia Cup 2024: திலக், பிரப்ஷிம்ரன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 19, 2024 • 08:51 PM

India A vs Pakistan A, ACC Emerging Teams Asia Cup 2024: ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் நடத்தப்படும் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரின் நடப்பு சீசன் ஓமனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 19, 2024 • 08:51 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கெப்டன் திலக் வர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பந்துவீச அழைத்தர். இதையாடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவெ உயர்ந்தது. மேற்கொண்டு இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 35 ரன்னில் விக்கெட்டை இழந்தார். 

Trending

அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 36 ரன்களை எடுத்திருந்த நிலையில் பிரப்ஷிம்ரன் சிங்கும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் திலக் வர்மா மற்றும் நெஹல் வதேரா ஆகியோரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் நெஹால் வதேரா 25 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆயுஷ் பதோனியும் 2 ரன்னுடன் நடையைக் கட்டினார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் திலக் வர்மாவும் 44 ரன்களை எடுத்திருந்த கையோடு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Also Read: Funding To Save Test Cricket

இறுதியில் ரமந்தீப் சிங் 17 ரன்னில் ரன் அவுட்டாக, இறுதியில் ராகுல் சஹார் பவுண்டரியும், ரஷிக் சலாம் சிக்ஸரும் விளாசி அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா ஏ அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளையும், முகமது இம்ரான், ஸமான் கான், அராஃபாத் மின்ஹாஸ், காஸிம் அக்ரம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement