
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய ஆணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டிருந்தார். அவருக்கு பதிலாக ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஜடேஜா முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்து, இந்திய அணியை 95 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன் என்ற விவாதம் இன்னும் ஓயாமல் நீடித்து வருகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து களத்தில் கூட அஸ்வின் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். ஆனால் விராட் கோலி அவரை ஓரம்கட்டியது சர்ச்சையை கிளப்பியது.