ENG vs IND: இந்திய அணியில் மேலும் ஒருவர் காயம்!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான பயிற்சின் போது இந்திய அணி வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர், பயிற்சியின் போது காயமடைந்துள்ளார். இதையடுத்து அவர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் உறுதிசெய்துள்ளார்.
இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனுபவ வீரர்களான இஷாந்த் சர்மா அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
முன்னதாக இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயமடைந்து தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது ஷர்துல் தாக்கூரும் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
Win Big, Make Your Cricket Tales Now