
ENG vs PAK, 3rd ODI: England win by 3 wickets and clean sweep the series 3-0 (Image Source: Google)
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இமாம் உல் அக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு 331 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 158 ரன்களையும், ரிஸ்வான் 74 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 5 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.