Advertisement
Advertisement
Advertisement

ENG vs SL, 2nd ODI: சாம் கரண் அபாரம்; தனஞ்செய அதிரடியால் தப்பிய இலங்கை!

இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 242 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 01, 2021 • 21:36 PM
ENG vs SL, 2nd ODI:  Sri Lanka end their innings at The Oval on 241/9.
ENG vs SL, 2nd ODI: Sri Lanka end their innings at The Oval on 241/9. (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது. 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் குசால் பெரேரா, பாதும் நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending


அதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த தனஞ்செய டி சில்வா - தசுன் ஷானகா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தனஞ்செய அரைசதம் அடித்து அசத்தினார். 

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்செய சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சரிவர விளையாடாததால், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா 91 ரன்களையும், தசுன் ஷானகா 47 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரண் 5 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement