
England Tests Give NZ Advantage; Early IPL Finish Played Into Hands Of India: Ross Taylor (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி தற்போது மும்பையில் அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் 14 நாட்கள் பயோ-பபுளில் இருந்த பிறகு, ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து சென்று, பிறகு அங்கு 10 நாட்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
இந்த நிலையில், நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டெய்லர், ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட போதிய அவகாசம் உள்ளது என தெரிவித்துள்ளார்.