
வரும் 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை ஹைபிரிட் மாடலில் நடத்தப்படவுள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்திய அணியும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்ததன் காரணமாக இத்தொடரானது ஹைபிரிட் மாடலில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனால் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அணியானது பிப்ரவரி 26ஆம் தேசி லாகூரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடவுள்ளது. இநிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கொப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை இங்கிலாந்து அணி தவிர்க்கும் சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.