
ENGW vs INDW, 3rd ODI: India win by 4 wickets (Image Source: Google)
இந்தியா- இங்கிலாந்து மகளிர் அணிகாளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இப்போட்டியின் போது மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்கைவர் 49 ரன்களையும், கேப்டன் ஹீத்தர் நைட் 46 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.