Advertisement

ராபின்சன்னை தொடர்ந்து ட்வீட் சர்ச்சையில் சிக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

இங்கிலாந்து அணியின் கேப்டனான இயான் மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர், இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் வகையில் செய்திருந்த ட்வீட்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 08, 2021 • 14:28 PM
Eoin Morgan, Jos Buttler and Brendon McCullum under fire for mocking Indian English in past
Eoin Morgan, Jos Buttler and Brendon McCullum under fire for mocking Indian English in past (Image Source: Google)
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி மோதி வருகிறது. இதன் முதல் போட்டி, தற்போது டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்காக, இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஓல்லி ராபின்சன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருந்தார்.

Trending


தான் கால் தடம் பதித்த முதல் சர்வதேச போட்டியில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் பெற்ற ராபின்சனுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்றும் காத்திருந்தது. 8 ஆண்டுகளுக்கு முன், பாலியல், இனவெறி தொடர்பாக ராபின்சன் செய்த ட்வீட்கள், அவர் கிரிக்கெட் உலகில் அசத்தலான அறிமுகத்தை பெற்ற சமயத்தில் வைரலானதால், அவர் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தது.

இதன் காரணமாக, அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் சிலர் செய்த பழைய ட்வீட்கள், தற்போது வைரலாகி மீண்டுமொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான பிரண்டன் மெக்கல்லம், இங்கிலாந்து அணியின் டி 20 கேப்டனான இயான் மோர்கன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர், இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் வகையில் செய்திருந்த சில அழிக்கப்பட்ட ட்வீட்கள் ஸ்கிரீன் ஷாட்கள், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான பட்லர், மோர்கன் ஆகியோரின் நடவடிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று தான் தெரிகிறது. ஆனால், அதே வேளையில், இந்தியர்கள் பலர், இது பற்றி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர்.

8 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ட்வீட் களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட இந்த ட்வீட்கள் பற்றி, இங்கிலாந்து நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டால், நிச்சயம் மோர்கன் மற்றும் பட்லருக்கு, இது நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement